Home One Line P1 1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் மீதான குற்றச்சாட்டுகளைத் திருத்த நீதிமன்றம் அனுமதி

1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் மீதான குற்றச்சாட்டுகளைத் திருத்த நீதிமன்றம் அனுமதி

441
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் தலையிட்டதாக  நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திருத்துவதற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் கோபால் ஸ்ரீராம் முன்வைத்த, குற்றச்சாட்டைத் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தப்பெண்ணத்தை ஏற்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையில் வழக்கு தொடங்கிய எட்டாவது நாளில் மட்டுமே இந்த திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஏழு அரசு தரப்பு சாட்சிகள் மட்டுமே சாட்சியமளித்ததாகவும், அவர்களை நஜிப்பின் தற்காப்பு வழக்கறிஞர்கள் முழுமையாக விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“குற்றச்சாட்டுகளுக்கான திருத்தங்களின் அடிப்படையில் தங்கள் வழக்கைத் தயாரிக்க வழக்கறிஞர்களுக்கு போதுமான நேரமும் வாய்ப்பும் இருப்பதாக நான் நம்புகிறேன். அதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் பின்னர் திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வாசித்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நஜிப் மற்றும் அருள் கந்தா ஆகியோர் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.