Home One Line P1 தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக ஓவியர் விசாரிக்கப்பட்டார்

தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக ஓவியர் விசாரிக்கப்பட்டார்

1113
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசியச் சின்னத்தை ஒத்ததாகக் கூறப்படும் புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தில் அதனை உருவாக்கிய ஓவியரிடம் இருந்து காவல் துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹித் இதனை உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் ஓவியரின் வாக்குமூலத்தை பதிவு செய்தோம் (ஜூலை 2 அன்று).” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு அறிக்கையை பதிவு செய்துள்ளது.

ஜூன் 30 அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெராக்புடாயா நிறுவனத்தை காவல் துறையினர் சோதனை செய்த சில நாட்களில் இந்த விசாரணை நடந்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த அட்டைப்படம், நாட்டின் தேசியச் சின்னத்தை அவமதிப்பதாக கூறி, அது தொடர்பாக 32 புகார் அறிக்கைகள் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளதகாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உள்துறை அமைச்சுஅறிவுறுத்தியது.

சோதனையின் போது காவல் துறையினர் புத்தகத்தின் 313 பிரதிகளை பறிமுதல் செய்து கெராக்புடாயா இயக்குனர் சோங் டன் சின்னின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

முன்னதாக, இந்த ஓவியத்தால் புண்படுத்தப்பட்டவர்களிடம் சோங் மன்னிப்பு கோரியிருந்தார். தனக்கு யாரையும் அவமதிக்கும் எண்ணமோ அல்லது படத்தை தீங்கிழைக்கும் நோக்கமோ இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

“நாங்கள் உண்மையில் அவமதிப்பதற்கான எண்ணத்தில் இல்லை.

“நாங்கள் தற்செயலாக இருந்திருக்கலாம் என்றாலும், அது யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால், புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்.

“எதிர்காலத்தில் நாங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவோம்.” என்று அவர் கூறியிருந்தார்.

அண்மையில், தகவல்களின் அடிப்படையில் இந்த ஓவியத்தை பயன்படுத்தி 1,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் கூறியிருந்தார்.

‘ரிபெர்த்: ரிபோர்மாசி, ரெசிஸ்தன்ஸ் அண்ட் ஹொப் இன் நியூ மலேசியா’ என்ற புத்தகத்தில் , தேசியச் சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் படங்களைப் பயன்படுத்தியது குறித்து சமீபத்திய நாட்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

மஇகா, மசீச, அம்னோ மற்றும் பாஸ் கட்சியினர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு தனது அமைச்சகம் உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்திருந்தார்.

பாக் சோங் என்றும் அழைக்கப்படும் சோங், புத்தகத்தின் அட்டைப்படத்தில் உள்ள படம் பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியத்திலிருந்து வந்தது என்றும், அட்டைப்படத்தில் அதன் பயன்பாடு ஓவியர் மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், புத்தகத்தின் ஆசிரியர் அக்கலைஞரைத் தொடர்பு கொண்டாரா, அல்லது மாறாக, புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு ஒரு வரைபடத்தைப் பெற்றாரா என்பது அவருக்குத் தெரியவில்லை.