Home One Line P1 மாலை 4 மணிக்கு பிரதமர் சிறப்புரை

மாலை 4 மணிக்கு பிரதமர் சிறப்புரை

459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதன் மேம்பாடுகள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்புரை நேரடியாக பல உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மதியம் 3 மணிக்கு பிரதமர் இன்றுன் நேரலையில் பேசுவார் என்ற செய்திப் படத்தை தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சு மறுத்திருந்தது.

“பிரதமர் அலுவகத்தின் கூற்றுபடி, மதியம் 3 மணிக்கு பிரதமர் சிறப்புரை ஆற்றுவார் என்ற செய்திப் படத்தில் உண்மையில்லை” என்று அது தெரிவித்திருந்தது.

பின்பு, பிரதமர் மொகிதின் யாசின் முகநூல் பக்கத்தில், மாலை 4 மணிக்கு இந்த நேரலை ஒளிபரப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.