Home One Line P1 ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றார்

ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற்றார்

371
0
SHARE
Ad

சிரம்பான்: ஜசெகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் பிரித்தம் சிங், தம் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

முன்னதாக, தாம் ஜசெகவில் பதவிகளிலிருந்து விலகி இருந்தாலும், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்க விரும்புவதாக மேரி தெரிவித்திருந்தார்.

அண்மையில், ரஹாங் சட்டமன்ற உறுப்பினர் மேரி ஜோசபின் ஜசெகவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தாம் சுயேச்சை வேட்பாளராக தொடர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜசெக உறுப்பினராக பதவி விலகியதாக அறிவிக்கப்பட்ட கடிதம் கிடைத்ததை மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ சுல்கிப்லி முகமட் உமர் உறுதிப்படுத்தியிருந்தார்.

கட்சியில் ஏற்பட்ட ஒரு சில ஏமாற்றங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.