Home One Line P1 சிறிய பெரும்பான்மை அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்குத் தடையாக இருக்கலாம்

சிறிய பெரும்பான்மை அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்குத் தடையாக இருக்கலாம்

341
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் நிதி அமைச்சர் ஜோஹாரி அப்துல் கானி, கொவிட்19- க்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது என்று கூறினார்.

எனவே, மக்களவையில் சிறிய பெரும்பான்மையுடன் இருக்கும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பது கடினமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

“நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு, அரசியல் நிலைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

#TamilSchoolmychoice

“ஒன்று அல்லது இரண்டு நாடாளுமன்ற இடங்கள் கூடுதலாக இருந்தால், மலேசியாவுக்கு வருவதற்கு முதலீட்டாளர்கள் யோசிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தேசிய கூட்டணியின் அரசியல் வலிமை சோதிக்கப்பட்டது.

தேசிய கூட்டணி அரசாங்கம் முகமட் அரிப் முகமட் யூசோப்பை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை முன்வைத்தது.

வாக்கெடுப்பில் 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர். மேலும், 109 பேர் ஆதரிக்கவில்லை.

அப்போது நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த முகமட் ராசிட் ஹஸ்னோன் வாக்களிக்கவில்லை. தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர், மாக்சிமஸ் ஓன்கிலி அந்நேரத்தில் விடுப்புக் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

தேசிய கொள்கைகளை செயல்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள் என்று அவர் கூறினார்.

வரிவிதிப்பு முறையை, ஜிஎஸ்டியிலிருந்து சேவை வரிக்கு  (எஸ்எஸ்டி)  மாற்றுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.

“முன்பு செயல்படுத்தக் கடினமாக இருந்த ஒரு கொள்கை, இவ்வளவு விரைவாக மாற்றப்பட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

“மக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் அரசாங்கம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். நாடு அமைதியானது என்று ஒரு தெளிவான செய்தியை நாம் அனுப்ப வேண்டும். எனவே நமது தயாரிப்புகளைத் தொடங்கலாம். இரு தரப்புகளின் உதவியுடன் வேலைகளை உருவாக்க முடியும்” என்று அவர் கூறினார்.