Home One Line P1 மொகிதின் அம்னோவில் இணைய விரும்பினால் அவரது பதவி நீக்கம் இரத்தாகும்

மொகிதின் அம்னோவில் இணைய விரும்பினால் அவரது பதவி நீக்கம் இரத்தாகும்

422
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், அவரை முன்பு பதவி நீக்கம் செய்ததற்கான முடிவை அம்னோ மாற்றியமைக்க முடியும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.

பிரதமர் அவ்வாறு செய்தால், எதிர்காலத்தில் தேர்தல் இடங்களை விநியோகிப்பது உட்பட பல விஷயங்களுக்கு இது உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

“கட்சிக்குத் திரும்புவதற்கான விருப்பம் இருந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் முடிவை நாங்கள் மாற்றலாம்.

#TamilSchoolmychoice

“அவர் ஒரு பெரிய கட்சி மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராக இருப்பார், எனவே இது எளிதாகவும் இருக்கும்.

” தொகுதி விநியோகத்தைப் பொறுத்தவரை, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. ” என்று அவர் இன்று தெரிவித்தார்.

அப்போது கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த நஜிப் ரசாக்கின் 1எம்டிபி ஊழல் பிரச்சனை குறித்து பேசியதற்காகவும், கேள்வி எழுப்பியதற்காகவும் மொகிதின் 2016-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.

மொகிதின் யாசின், பின்னர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுடன் கைகோர்த்து 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிட பெர்சாத்து கட்சியை உருவாக்கி, இறுதியில் தேர்தலில் வெற்றி பெற்று, நம்பிக்கைக் கூட்டணி முகாமுடன் இணைந்தார்.

இருப்பினும், ‘ஷெராடன் நகர்வு’ தொடர்ந்து கட்சி பிளவுபட்டது. மொகிதின் பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியே கொண்டு வந்து, அம்னோ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார்.

பின்னர் மகாதீருக்குப் பதிலாக மொகிதின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.