Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை: குவான் எங் 3-வது முறையாக விசாரிக்கப்பட்டார்

கடலடி சுரங்கப்பாதை: குவான் எங் 3-வது முறையாக விசாரிக்கப்பட்டார்

498
0
SHARE
Ad

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் 6.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடலடி சுரங்கப்பாதை கட்டுமானத் திட்டம் தொடர்பான விசாரணை குறித்து சாட்சியமளிக்க முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக விசாரிக்கப்பட்டார்.

குவான் எங் காலை 10.40 மணிக்கு எம்ஏசிசி கட்டிடத்திற்கு வந்தடைந்தார். அவரது வழக்கறிஞர் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.எஸ்.என். ராயருடன் குவான் எங் வந்திருந்தார்.

குவான் எங் கடந்த புதன்கிழமை பினாங்கு அரசாங்க கடலடி சுரங்கப்பாதை திட்டத்தின் விசாரணைக்கு உதவ சாட்சியாக முதல் முறையாக எம்ஏசிசிக்கு வந்தார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமையன்று, குவான் எங் அதே விவகாரம் தொடர்பாக சாட்சியமளிக்க எம்ஏசிசிக்கு வந்திருந்தார்.

ஜூலை 7-ஆம் தேதி, பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யோவ் இந்த திட்டம் குறித்து சாட்சியமளிக்க பினாங்கு எம்ஏசிசிக்கு வந்திருந்தார்.

லிம் 2008 மற்றும் 2018- க்கு இடையில் பினாங்கு முதல்வராக பணியாற்றினார். இந்த வழக்கு தொடர்பாக எம்ஏசிசி இதுவரையிலும் 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதில் பினாங்கு முதல்வர் சௌ கோன் யோவ், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஜகதீப் சிங் தியோ, சோங் எங், மற்றும் பீ பூன் போ ஆகியோரும் அடங்குவர்.

கொம்தாரின் 52- வது மாடியில் சைரில் கிர் ஜோஹாரி மற்றும் துணை முதல்வர் பி.இராமசாமியும் இதில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம், புதிய தடங்களைத் தொடர்ந்து எம்ஏசிசியால் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.