Home One Line P1 சபா தேர்தல்: போட்டியிடும் கட்சியை சிரமப்படுத்த வேண்டாம்

சபா தேர்தல்: போட்டியிடும் கட்சியை சிரமப்படுத்த வேண்டாம்

393
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஏற்பாடுகள் குறித்து முழுமையான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

வாரிசானை தோற்கடிப்பதற்கான வாய்ப்புகளை பாதிக்கக் கூடாது என்றும் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா தேசிய கூட்டணிக்கு அறிவுறுத்தினார்.

இந்த நேரத்தில் போட்டியிடப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து சில தரப்பினரால் வெளியிடப்படும் அறிக்கைகள், போட்டியிடும் கட்சிக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணி எந்த தொகுதிகளுக்கு போட்டியிட வேண்டும் என்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. மாநிலத் தேர்தலில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதை உறுதி செய்ய அவரது கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்” என்று அவர் இன்று மேற்கோளிட்டுள்ளார்.

இருப்பினும், ஜூலை 30- ஆம் தேதி அம்னோ தேசிய கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்காது என்று குறிப்பிட்டதற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பெர்சாத்து மற்றும் அம்னோவிற்கான தொகுதிகள் விநியோகம் தொடர்பான பிரச்சனை சமீபத்தில் பரபரப்பாகி வருகிறது.