Home One Line P2 அமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி

அமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி

696
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

எனினும் தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் புதுடில்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

யார் மூலம் அமித்ஷாவுக்கு கொவிட்-19 தொற்று பீடிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாகத் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொவிட்-19 பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டுமென அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.