Home One Line P1 ஊராட்சித் தேர்தலை தேசிய கூட்டணி நடத்தாது

ஊராட்சித் தேர்தலை தேசிய கூட்டணி நடத்தாது

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசு ஊராட்சித் தேர்தலை நடத்தாது என்று ஊராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.

இருப்பினும், ஊராட்சித் தேர்தல்களை அமல்படுத்துவது ஊராட்சி மன்றத் தலைவர்களின் தரத்தை மேம்படுத்துவது உட்பட பல நன்மைகளைத் தருகிறது என்று சுரைடா ஒப்புக் கொண்டார்.

ஊராட்சி அரசாங்கமும் , சமூகமும் இதை செயல்படுத்த தயாராக இல்லை என்று சுரைடா இன்று மக்களவையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணி அரசாங்கம் ஊராட்சித் தேர்தல்களை நடத்தாது, இது ஒரு கடுமையான விஷயமாகவும் நான் கருதுகிறேன்.

“நம் சமூகமும் ஊராட்சி அதிகாரிகளும் தயாராக இல்லை” என்று அவர் கூறினார்.

அமைச்சரவை ஒப்புதலுக்காக 2021 நடுப்பகுதியில் ஊராட்சித் தேர்தல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் சுரைடா மக்களவையில் தெரிவித்தார். தற்போது, ​​கொள்கை மற்றும் செயல்பாட்டுக் குழு இந்த யோசனையை மதிப்பாய்வு செய்து வருகிறது என்றும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும், அம்னோ, பாஸ் மற்றும் ஜிபிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த தேசிய கூட்டணி கட்சிகள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புத்ராஜெயா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று தாம் ஒப்புக்கொள்வதாக சுரைடா கூறினார்.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் தகுதி வாய்ந்த உள்ளூர்வாசிகளாக இருக்க வேண்டும் என்று தனது அமைச்சகம் விதித்துள்ளதாக அவர் கூறினார்.

“ஆனால் இது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.

அதற்கு ஈடாக, ஊராட்சி மன்றங்கள் அமைச்சினால் வழங்கப்படும் கொள்கைகளை செயல்படுத்த ஏதுவாக, ஊராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம் செய்ய தனது அமைச்சகம் செயல்படும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், மந்திரி பெசார் மற்றும் முதல்வர் கலந்து கொண்ட மாவட்ட மன்றக் கூட்டங்கள் மூலம் அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.