Home One Line P2 சென்னை மருத்துவ மாணவர்களுக்கு நாடு திரும்ப உதவிய சோனு சூட்

சென்னை மருத்துவ மாணவர்களுக்கு நாடு திரும்ப உதவிய சோனு சூட்

509
0
SHARE
Ad

சென்னை: நேற்று காலை, 100 மாணவர்கள் மாஸ்கோவிலிருந்து சென்னைக்கு வந்தனர். நடிகர் சோனு சூட், கொவிட்19 தொற்றுநோய் பாதித்ததிலிருந்து பல மக்கள் தங்கள் வீடுகளை அடைய உதவி வருகிறார்.

இம்முறை சென்னை மாணவர்களுக்காக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். பல்வேறு மருத்துவ நகரங்களில் சிக்கித் தவிக்கும் இந்த மருத்துவ மாணவர்களை, தாய்நாட்டிற்கு அழைத்து வர ஒரு விமானத்தை சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார்.

இளைஞர்கள் இப்போது நகரத்தின் வெவ்வேறு தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் நாட்டிற்கு திரும்பியவதால் தங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். பலர் நடிகர் சோனுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“உலகம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் என்னை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு, உதவி கேட்டார்கள். ஆனால், இதையெல்லாம் செய்ய எனக்கு அனுபவம் இல்லை. எனவே, அந்தந்த நாடுகளில் உள்ள அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் தூதரகங்களுடன் பேசினேன்.

“பிரச்சனையில் இருப்பவர்கள் உங்களிடம் இவ்வளவு நம்பிக்கைக் கொண்டிருக்கும்போது, ​​அதைச் செய்ய கடவுள் உங்களுக்கு கூடுதல் பலத்தைத் தருகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் இங்கிருந்து எனது பயணத்தைத் தொடங்கியதால், சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்காக இதைச் செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“‘கள்ளழகர்’ திரைப்படத்திற்காக சென்னையில் முதல் முறையாக கேமராவை எதிர்கொண்டேன். நான் இரயிலில் சென்னை அடைந்தேன். ‘தமிழ் கற்றுக்கொள்வது எப்படி’ என்ற புத்தகத்தை என்னுடன் எடுத்துச் சென்றேன். இந்த மாணவர்கள் உதவிக்காக என்னை அணுகியபோது, ​​நான் அவர்களை மீண்டும் நகரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உணர்ந்தேன்.” என்று சோனு சூட்  குறிப்பிட்டுள்ளார்.