Home One Line P1 பெர்லிசில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

பெர்லிசில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

478
0
SHARE
Ad

கோலா பெர்லிஸ்: மீட்சி நிலைக்கான மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை பகுதிக்கு அருகில் உள்ள மூன்று பெர்லிஸ் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை சட்டமன்ற அமர்வில் கலந்து கொள்ளும் முன், கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாங்லாங் சட்டமன்ற உறுப்பினர், குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிம்பாங் எம்பாட் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு பெர்லிஸ் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஹம்டான் பஹாரி இந்த உத்தரவை வழங்கினார்.

கட்டுப்பாட்டு பகுதியான சாங்லாங்கில், கம்போங் தானா திம்புல் மற்றும் கம்போங் கோலா சாங்லாங் ஆகிய இரண்டு கிராமங்கள் இருப்பதாக ஹம்டான் கூறினார்.

#TamilSchoolmychoice

“மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை துவாங்கு மருத்துவமனையில் பரிசோதனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அவர்களுக்கு தொற்று இல்லையென்றால், சட்டமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

“கொவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காகவும், நாளை கூட இருக்கும் சட்டமன்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தடுப்பு நடவடிக்கையாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ஹம்டான் கூறினார்.