Home One Line P2 கைலாசா நாட்டிற்கு மத்திய வங்கி அமைப்பதாக நித்தியானந்தா அறிவிப்பு

கைலாசா நாட்டிற்கு மத்திய வங்கி அமைப்பதாக நித்தியானந்தா அறிவிப்பு

548
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, அவர் உருவாக்க உள்ள கைலாசா நாட்டிற்கு ‘ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா’ என்னும் மத்திய வங்கியை அமைக்க உள்ளதாகப் பேசியுள்ளார்.

இந்தியாவில் ஆள் கடத்தல், பண மோசடி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகளில் அவர் தேடப்படுகிறார்.

ஆன்மிகம் குறித்து சொற்பொழிவாற்றும் நித்தியானந்தா, அவ்வப்போது தாம் உருவாக்க உள்ள கைலாசா நாடு குறித்தான பதிவுகளை வழங்கி வருகிறார்.

#TamilSchoolmychoice

கைலாசாவுக்கான மொத்தப் பொருளாதாரம், பொருளாதாரக் கொள்கைகளும் தயார் என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

“300 பக்க ஆவணத்தை தயாரித்துள்ளோம். கைலாசாவுக்கான தனி பணம், அதற்கான கொள்கை, உள்ளூர் பணப் பரிமாற்றம், வெளிநாடுகளுடனான பணப் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தான விதிமுறைகள் தயார். ” என்று அவர் கூறினார்.