Home One Line P1 மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து பினாங்கு முடிவு எடுக்கவில்லை

மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து பினாங்கு முடிவு எடுக்கவில்லை

438
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு மற்றும் இந்தோனிசியா இடையே மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநில அரசு கூறுகிறது.

பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ கூறுகையில், விமானங்கள் சரியான அனுமதி பெற்று, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும் வரை விமானங்கள் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறினார்.

“ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்தோனிசியாவிலிருந்து மருத்துவ சுற்றுலாவுக்கு அண்மையில் பினாங்கு வந்தடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 14 அன்று, ஏர் ஏசியா தனது முதல் அனைத்துலக மருத்துவ விமானத்தை மேடானில் இருந்து பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்குகொண்டு வந்தது.

இந்தோனிசியாவிலிருந்து வரும் நோயாளிகளுக்கும், மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கும் மருத்துவ விமான சேவைகளை வழங்குவதன் மூலம் மலேசியாவில் சிகிச்சை, சுகாதார சேவைகளுக்கு அதிக அணுகல் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ நிறுவனங்கள், அரசு அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக ஏர் ஏசியா.காம் தலைமை நிர்வாக அதிகாரி கரேன் சான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியது, இந்தோனிசியாவில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் 19 சம்பவங்கள் மற்றும் பினாங்கில் தொற்று பரவுவதற்கான ஆபத்து குறித்து சிலர் கவலை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 16 வரை, இந்தோனிசியாவின் சுகாதார அமைச்சகம் 2,081 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 சம்பவங்களை அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 139,549- ஆகக் கொண்டு வந்துள்ளது.