இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி (இந்திய நேரப்படி ) அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டுள்ளனர். மேலும், 9 பேர் மின்நிலையத்தின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments