Home One Line P1 கொவிட்19: கெடாவில் மூவர் பாதிப்பு

கொவிட்19: கெடாவில் மூவர் பாதிப்பு

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,249-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 9 சம்பவங்களில் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 5 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். கெடாவில் தாவார் தொற்றுக் குழுவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் புதிதாக மாஜு தொற்றுக் குழு உருவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 13 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,945 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 174 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 7 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நால்வருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.