Home One Line P1 நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது

நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது

754
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நிதி அமைச்சர்  தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 101 திட்டங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் பொது குத்தகை இன்றி வழங்கியதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் நீடித்த அமளியைத் தொடர்ந்து அனைவரையும் அமரும்படி அவைத்தலைவர் அசார் அசிசான் ஹருண் உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

எனினும்  புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தனது இருக்கையில் அமராமல் தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டதால் அவையிலிருந்து ஒரு நாளைக்கு அவரை வெளியேற்றும் உத்தரவை அசார் பிறப்பித்தார்.

நிதி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் நிதி அமைச்சரும் பாகான் (பினாங்கு) நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் வழங்கப்பட்ட குத்தகைகளின் பட்டியலை வெளியிடுமாறு தெங்கு சாப்ருலுக்கு சவால் விடுத்தார்.

தனது பதவிக்காலத்தில் அவ்வாறு எத்தனை குத்தகைகள் நேரடியாக வழங்கப்பட்டன, இப்போது தேசிய கூட்டணி ஆட்சியில் எத்தனை குத்தகைகள் வழங்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடுமாறு  லிம், தெங்கு சாப்ருலைக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் தனது ஆட்சியில் வழங்கப்பட்ட 101 திட்டங்களின் பட்டியலை வெளியிடுமாறு தெங்கு சாப்ருலுக்கு சவால் விடுத்தார்.

இன்று புதன்கிழமை மாலை 101 குத்தகைகளின் பட்டியல் நிதி அமைச்சால் வெளியிடப்பட்டது.

இந்தக் குத்தகைகள் குறித்து விசாரிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அம்னோ குழுவினர் புகார் அளித்துள்ளனர்.