காட்டுத் தீயினால் பல குடும்பங்கள் தங்களின் ஒட்டு மொத்த உடமைகளையும் இழந்துள்ளனர்.
கலிபோர்னியா, ஓரிகோன், வாஷிங்டன் ஆகிய மூன்று மாநிலங்களும் புகைமூட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் சிறுசிறு அளவில் இந்தக் காட்டுத் தீ ஆங்காங்கே தொடங்கி தற்போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றச் செயல்கள் அதிகரிக்கலாம் என்ற அபாயத்தால் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை ஊரடங்கு விதிக்கப்படலாம் என காவல் துறையினர் அறிவித்தனர்.
அமெரிக்காவின் காட்டுத் தீயின் கோரத் தாண்டவங்களை பலரும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். வானவெளியெங்கும் ஆரஞ்சும் சிவப்பும் கலந்த தீயின் சுவடுகளைக் கொண்ட வண்ணமயமான, புகைமூட்டம் சூழ்ந்த – அந்தப் படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்: