Home One Line P2 ஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது

ஐபிஎல் கிரிக்கெட் : டில்லி அணி, பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது

980
0
SHARE
Ad

துபாய் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) துபாய் நகரில் நடைபெற்ற  இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்தது.

மலேசிய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணி, 20 ஓவர்களில் 157 ஓட்டங்களை எடுத்தது. 8 விக்கெட்டுகளை இழந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணி அதே 20 ஓவர்களில் 157 ஓட்டங்களை எடுத்தது. 8 விக்கெட்டுகளை இழந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சரிசமமாக முடிந்தது. எந்த அணிக்கு வெற்றி என்பதை நிர்ணயிக்க கூடுதலான சூப்பர் ஓவர் என்னும் கூடுதல் ஓவர் மூலம் இரு அணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணி இரண்டு விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் போட்டிகள்

இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் தொடங்கின.

இந்த முறை ஒரே ஒரு வித்தியாசம், வழக்கமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டிகள் இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு சிற்றரசுவில் நடைபெறுகின்றன.

காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை. கொவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்திருப்பதுதான்!

ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் அரங்கிற்குள் இரசிகர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அனுமதியில்லை.

எனினும் போட்டிகள் நேரலையாக இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதனால் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி நேரலை வழி ஐபிஎல் ஆட்டங்களைக் கண்டு களிக்க முடியும்.

இன்று திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களமிறங்குகின்றன.