Home One Line P2 ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது

ஐபிஎல் கிரிக்கெட் : பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியைத் தோற்கடித்தது

945
0
SHARE
Ad

துபாய் : நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) துபாய் நகரில் நடைபெற்ற  இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

மலேசிய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவரிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பெங்களூர் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் போட்டிகள்

இந்தியாவின் புகழ்பெற்ற ஐபிஎல் (இந்தியன் பிரிமியர் லீக்) கிரிக்கெட் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 19) முதல் தொடங்கின.

இந்த முறை ஒரே ஒரு வித்தியாசம், வழக்கமாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டிகள் இந்த ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு சிற்றரசுவில் நடைபெறுகின்றன.

காரணம், சொல்லித் தெரியவேண்டியதில்லை. கொவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்திருப்பதுதான்!

முதல் முறையாக ஐபிஎல் போட்டிகள் வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் அரங்கிற்குள் இரசிகர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அனுமதியில்லை.

எனினும் போட்டிகள் நேரலையாக இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. அதனால் கோடிக்கணக்கான இரசிகர்கள் தொலைக்காட்சி நேரலை வழி ஐபிஎல் ஆட்டங்களைக் கண்டு களிக்க முடியும்.

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்குகிறது. சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.