Home One Line P1 வாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது

வாக்குகளை வாங்கியதாகக் கூறி பாதுகாப்புப் பணியாளர்கள் கைது

471
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அரசியல் கட்சிக்கு வாக்குகளை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் நேற்று லாஹாட் டாத்துவில் கைது செய்யப்பட்டனர்.

“அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அவர்களின் நடவடிக்கைகள்” குறித்து அதிகாரிகள் தகவல் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

“இந்த பணம் இன்று கட்சிக்கு வாக்களிக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சபா எம்ஏசிசி இயக்குனர் எஸ்.கருணாநிதியை கைது செய்யப்பட்ட விவகாரத்தை உறுதிப்படுத்தினார். ஆனால், மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

16,877 காவல் துறை, இராணுவப் படையினர் அவர்களின் குடும்பங்களுடன் இன்று முன்கூட்டிய வாக்களிப்பில் வாக்களித்தனர். முதற்கட்ட வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக, தேர்தல் முறைகேடுகள் குறித்து கண்காணிக்க சுஹாகாம் நேற்று தொடங்கி தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணையர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம், வாக்களிப்பைக் கண்காணிப்பார்கள் என்று சுஹாகாம் கூறியது.

மாதுங்கோங், பண்டாவு, கரம்புனை, டாராவ், கெபாயான், மோயோக், மெம்பாகுட், கோலா பென்யு, சூக், நபாவான், கும்-கும், சுங்கை மணிலா, கெமாபோங், மெலாலாப், புகாயா, சுலாபாயான், செனால்லாங், குகுசான், தன்சோங் பத்து , இனானாம் மற்றும் அபி-அபி ஆகிய இடங்களில் அது கண்காணிப்பை மேற்கொள்ளும்.

“எனவே, இந்த காலகட்டத்தில் எந்தவொரு தேர்தல் குற்றங்கள் பற்றிய தகவல்களை வாக்காளர்களிடமிருந்து சுஹாகாம் வரவேற்கிறது ,” என்று அது ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தது.

“வாக்காளர்கள் சபா சுஹாகாம் அலுவலகத்தை 088-317405 அல்லது 019-324 5650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுஹாகாம் அதன் கண்காணிப்பு கண்டுபிடிப்புகள் அனைத்தையும் செப்டம்பர் 27 அன்று மக்களுக்கு தெரிவிக்கும்.”

தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெர்சே 2.0-வும், தேர்தலை கண்காணித்து வருகிறது. தேர்தல்களுக்குப் பிறகு அதன் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை வெளியிடும்.