எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.
“நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினைச் சந்திக்கத் எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. எனினும், மாமன்னர் உடல் நலக் குறைவு காரணமாக தேசிய இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவருடன் நான் திங்கட்கிழமை இரவு தொலைபேசியில் பேசினேன். அவர் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்தேன்” எனவும் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
“நான் ஐந்து அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. மிக வலுவான, மிக அதிகமானப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன்” என்றும் அன்வார் தன்னம்பிகையுடன் கூறினார்.
எனவே, தனது தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வழிவிட்டு மொகிதின் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பார் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.