Home One Line P2 எஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்

எஸ்பிபி: பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு அரசு தரப்பிடம் அனுமதி கோரப்படும்

711
0
SHARE
Ad

சென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் அவரது உடலுக்கு, சென்னை இல்லத்தில் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி பெற முயற்சி செய்கின்றனர்.

நுரையீரல் செயலிழப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 25) காலமான எஸ்பிபி, சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படுவார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், மனைவி சாவித்ரி, சகோதரி ஷைலாஜா மற்றும் மகள் பல்லவி ஆகியோர் காலை முதல் மருத்துவமனையில் இருந்தனர்.

#TamilSchoolmychoice

கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் எஸ்.பி.பியை பார்வையிட்ட வேளையில்,  ​​பாரதிராஜா இன்று காலை அவரை சென்று கண்டார். இரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் காவல் துறை அதிகாரிகள் இப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அகால மரணம் தென் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையில் பல பிரபலங்கள் மற்றும் சகாக்கள் அவரது மரணத்திற்கு டுவிட்டர் மற்றும் முகநூலில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று முன்னதாக, அவரது மகன் எஸ்.பி. சரண் ஊடகங்களிடம் வெளியிட்ட காணொலிய்ல “என் அப்பா மதியம் 1:04 மணிக்கு காலமானார். உங்கள் பிரார்த்தனைக்கு அனைவருக்கும் நன்றி. அவரது இரசிகர்கள் அவரை நினைவில் கொள்ளும் வரை எனது அப்பா நீண்ட காலம் வாழ்வார்” என்று அவர் கூறினார்.

கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி ஆகஸ்டு 5-ஆம் தேதி எஸ்.பி பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 13- ஆம் தேதி அவரது நிலை மோசமடைந்தது. அதன் பிறகு அவர் சுவாசக் கருவி உதவியுடன் வைக்கப்பட்டார்.