Home One Line P1 சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி – 32;...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி – 32; மற்றவை – 4

392
0
SHARE
Ad

கோத்தா கினபாலு :(இரவு 8.45 மணி நிலவரம்)

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், பலர் எதிர்பார்த்தைக் காட்டிலும் தேசிய கூட்டணி, தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

இன்று மாலை 5.30 மணியுடன் முடிவுற்ற சபா மாநில வாக்களிப்பைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல் கட்டமாக வாரிசான் 20 தொகுதிகளிலும், தேசிய முன்னணி, பெர்சாத்து உள்ளிட்ட தேசியக் கூட்டணி 32 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.

#TamilSchoolmychoice

வாரிசான் தனியாக 12 தொகுதிகளில் முன்னணியில் இருக்க, நான்கு தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லுயாங், லிகாஸ், ஸ்ரீ தன்சோங் மற்றும் எலோபுரா ஆகிய தொகுதிகளில் அது வெற்றிப் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்கள். ஜசெக, 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது (வெற்றிப் பெற்ற தொகுதிகள் உட்பட) . மேலும், பிகேஆர் கட்சி 2 தொகுதியில் முன்னணியில் உள்ளது.

தேசியக் கூட்டணி சார்பில் அம்னோ 14 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பெர்சாத்து 7 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதற்கு முன்னர் பெர்சாத்து அம்னோவைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளைப் பெற்று முன்னணியில் இருந்தது, ஆயினும், தற்போது, 9 தொகுதிகளில் அது பெர்சாத்துவைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது.

ஸ்டார் கட்சி 5 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

பிபிஎஸ் 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

சுயேச்சை வேட்பாளர்கள் மூவர் முன்னணியில் உள்ளனர்.

இறுதி நிலவரங்கள் அதிகாரபூர்வமாக இரவு 10.00 மணிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)