Home One Line P1 கொவிட்19: புதிதாக 115 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 115 சம்பவங்கள் பதிவு

409
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று இலக்க கொவிட்19 தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று 115 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 112 சம்பவங்கள் உள்ளூர் தொற்றுகளாகும். மேலும், 3 தொற்றுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

இன்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் சபாவில் 98 சம்பவங்கள், சிலாங்கூர் (11 சம்பவங்கள்), திரெங்கானு (1), கெடா (1) சம்பவங்கள் பதிவாகின. உள்ளூர் சம்பவங்களில் 11 சபாவுக்கு பயணம் செய்த வரலாறு உள்ளது.

#TamilSchoolmychoice

இதனால், நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 11,034- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று 54 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கபட்ட நிலையில், மொத்தமாக வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,889- ஆக உயர்ந்துள்ளது.

1,011 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் என்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.