Home One Line P1 ஷாபி தோல்வியை ஏற்கவில்லை, யாரையும் விலைக்கும் வாங்கவில்லை

ஷாபி தோல்வியை ஏற்கவில்லை, யாரையும் விலைக்கும் வாங்கவில்லை

540
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அண்மையில் நடந்த மாநிலத் தேர்தலில் தோல்வியை வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்டால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களை தம் வசம் அழைக்கும் முயற்சிகளை அவர் மேற்கொள்ளமாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின்படி, பெரும்பாலான வாரிசான் பிளாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டனர்.

“ஷாபி மற்றும் ஆளுநர் ஜூஹார் மஹிருடின் தொடர்பில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

“அவர் (ஷாபி) தனக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது என்பதை அறிந்திருந்தார்.

“ஷாபிக்கு இது பற்றித் தெரியும். அவர் வேறு எந்த வழியையும் விரும்பவில்லை அல்லது ஆதரவைப் பெற விரும்பவில்லை, இதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று வாரிசான் பிளாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

வாரிசான் பிளாஸ் கூட்டணி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த சனிக்கிழமையன்று மாநில அரசைக் கைப்பற்றத் தவறிவிட்டன. 73 தொகுதிகளில் அது 32 தொகுதிகளை மட்டுமே வென்றது.

தேசிய முன்னணி, தேசிய கூட்டணி மற்றும் பிபிஎஸ் சம்பந்தப்பட்ட ஜிஆர்எஸ் 38 இடங்களை வென்றது. சபா DUN இல் பெரும்பான்மை பெற தேவையான இடங்களின் எண்ணிக்கை 37 ஆகும்.

தேர்தலில் வென்ற மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இப்போது ஜிஆர்எஸ் ஆதரவாளர்கள்.