Home One Line P1 கொவிட்19: சபாவைக் காட்டிலும் சிலாங்கூரில் தொற்று வேகமாகப் பரவுகிறது

கொவிட்19: சபாவைக் காட்டிலும் சிலாங்கூரில் தொற்று வேகமாகப் பரவுகிறது

852
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று இப்போது சபாவை விட சிலாங்கூரில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சிலாங்கூரின் ஆர்டி (Rt) மதிப்பு 1.95 ஆகவும், சபாவின் மதிப்பு 1.26 ஆகவும் பதிவாகி இருப்பதாக அவர் தமது முகநூலில் ஓர் அறிக்கையில் கூறினார்.கொவிட்19 எவ்வளவு வேகமாக பரவுகிறது என்பதைக் கணக்கிட ஆர்டி மதிப்பு பயன்படுத்தப்படுகிறது.

“சிலாங்கூரின் ஆர்டி மதிப்பின்படி, இதற்கு முன்பு இரண்டு முதல் மூன்று சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இப்போது 10 முதல் 15 வரை புதிய தினசரி சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“பொது சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயத்தை இது குறிக்கிறது.”

சபாவின் ஆர்டி மதிப்பு குறைவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான புதிய தினசரி சம்பவங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அது இன்னும் கவலைப்படுவதாக இருப்பதாக அவர் கூறினார்.

கெடாவில் ஆர்டி மதிப்பு 1 முதல் 0.65 க்கு மேல் குறைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மலேசியாவில் ஆடி மதிப்பு 1.25 ஆகும்.

உகந்த பொது சுகாதார நடவடிக்கைகள் அமல்படுத்தப்படாவிட்டால் ஆர்டி மதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்த நூர் ஹிஷாம், பொது மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய நிலவரப்படி, புதிதாக 89 கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 86 உள்ளூர் பரவல்கள் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 84 பேர் மலேசியர்கள். எஞ்சிய இருவரும் வெளிநாட்டவர்.

பெரும்பான்மையான தொற்றுகள் சபா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டன. 35 தொற்றுகள் சபாவில் பதிவு செய்யப்பட்டன.

மொத்தம் பதிவான 89 தொற்றுகளில் 3 இறக்குமதித் தொற்றுகளாகும்.

புதிதாக 2 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. இதைத் தொடர்ந்து மொத்த மரண எண்ணிக்கை 136 ஆக உயர்ந்திருக்கிறது.

புதிய தொற்றுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 11,224 ஆகும்.