Home One Line P2 கொவிட்19 தொற்றைக் கண்டு பயப்பட வேண்டாம்!- டிரம்ப்

கொவிட்19 தொற்றைக் கண்டு பயப்பட வேண்டாம்!- டிரம்ப்

453
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவ மருத்துவமனையை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அங்கு அவர் கொவிட்19 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று, பொருளாதார கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நோயினைக் கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் இருவருக்கும் கொவிட்19 தொற்று இருப்பது உறுதியாகி செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

தாமும், மனைவி மெலனியா டிரம்பும் கொவிட்19 தொற்று பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தொடங்குவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்ஸ் வியாழக்கிழமை (அக்டோபர் 1) தொற்றுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

மினசோட்டாவில் புதன்கிழமை மாலை பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ஹிக்ஸ் இலேசான அறிகுறிகளை உணரத் தொடங்கினார். விமானத்தில் பயணம் செய்த அவர், விமானத்தில் இருந்த மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார் மற்றும் வியாழக்கிழமை அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

டிரம்பிற்கு ஆலோசகராக பணியாற்றும் ஹிக்ஸ், செவ்வாயன்று கிளீவ்லேண்டில் நடந்த பிரச்சாரத்திற்கு டிரம்புடன் பயணம் செய்தார்