Home One Line P1 எம்ஏசிசி: அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரி கைது

எம்ஏசிசி: அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரி கைது

381
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இலஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்பட்ட பின்னர், அமைச்சின் முன்னாள் தலைமை உதவிச் செயலாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.

தற்போது ஒரு பயிற்சி மையத்தில் இயக்குநராக இருக்கும் அவர், அமைச்சில் 118 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உரங்களை வழங்க ஒப்பந்ததாரரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆதாரங்களின்படி, புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் நேற்று சாட்சியமளிக்கும் போது 42 வயதான முன்னாள் மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

“ஒரே நபருக்கு சொந்தமான 3 நிறுவனங்களுக்கு 2019 முதல் 2020 வரை 2 ஆண்டு காலத்திற்கு 118 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 16 (அ) (பி)- இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கு எதிரான 7 நாள் தடுப்புக் காவல் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது.

துணை தலைமை ஆணையர் அகமட் குசைரி யஹாயா கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.