Home One Line P1 கோயில்கள் இப்போதைக்கு மூடப்படாது

கோயில்கள் இப்போதைக்கு மூடப்படாது

518
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் கத்தோலிக்க பேராயர் இன்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள அனைத்து ஒன்றுகூடலையும் நிறுத்தக் கோரியதை அடுத்து, கத்தோலிக்க அல்லாத தேவாலயங்கள் மற்றும் இந்து கோவில்கள் இன்னும் அவ்வாறு மூட திட்டமிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளன.

கவுன்சில் ஆப் சர்ச்ஸ் மலேசியா (சி.சி.எம்) பொதுச் செயலாளர் ஹெர்மன் சாஸ்திரி கூறுகையில், மற்ற கிறிஸ்தவரின் சேவைகளை இதுவரை நிறுத்தி வைக்கவில்லை, இருப்பினும் அவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களும் வழிபாடு மற்றும் பிற நடவடிக்கைகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது இன்னும் வெளிப்படையான நிறுத்தம் அல்ல, ”என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேவாலய சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கு அக்டோபர் 2-ஆம் தேதி தேவாலயங்களுக்கு சி.சி.எம் ஆலோசனை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான், இந்த நேரத்தில் இந்து கோவில்கள் திறந்திருக்கும் என்று கூறினார். இருப்பினும் அவை நிர்ணயிக்கபட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

நேற்று கோயில்களுக்கான சுற்றறிக்கையில், அவர்கள் நிர்ணயிக்கபட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். மேலும் அக்டோபர் 17 அன்று நவராத்திரி திருவிழா மிதமாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இது (நவராத்திரி) ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுடன் எச்சரிக்கையுடன் கொண்டாடப்பட வேண்டும். வெளிப்புற ஊர்வலத்தை தவிர்க்க வேண்டும்.

“தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள், குறிப்பாக கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள், அரசாங்கத்தால் நிர்ணயிக்கபட்ட நிர்வாக நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.