Home One Line P1 கொவிட்19: அதிர்ச்சி! 869 புதிய சம்பவங்கள் உயர்வு – 4 மரணங்கள்

கொவிட்19: அதிர்ச்சி! 869 புதிய சம்பவங்கள் உயர்வு – 4 மரணங்கள்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 869 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகி அனைத்து தரப்புகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை அனைத்துமே உள்நாட்டில் பரவிய தொற்றுகள் என்பதும் வெளிநாட்டு இறக்குமதி தொற்றுகள் கடந்த ஒரு நாளில் எதுவுமில்லை என்பதும் மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 19,627 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

451 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் 5 புதிய தொற்றுத் திரள்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிள்ளான் பள்ளத்தாக்கில் 3 தொற்றுத் திரள்களும் சபாவில் ஒரு தொற்றுத் திரளும் திரெங்கானுவில் இன்னொரு தொற்றுத் திரளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

302 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 12,561- ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.

மொத்தம் 6,886 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 91 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 30 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று புதிதாக 4 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.