Home One Line P2 ராஜஸ்தானில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை

ராஜஸ்தானில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை

686
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா ராஜஸ்தானில் பட்டாசுகள் வெடிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது. கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தீபாவளி பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவதை தவிர்க்க ராஜாஸ்தான் முடிவு செய்துள்ளது.

பட்டாசுகள் விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொவிட்-19 நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கையில், இதிலிருந்து நிலைமை சீரடையாத சூழலில், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிரமம் என்று பலர் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

இதை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.