Home One Line P1 கொவிட்19: இருவர் மரணம், 834 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இருவர் மரணம், 834 புதிய சம்பவங்கள் பதிவு

375
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை 957 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 834 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூர் தொற்றுகள் 831 சம்பவங்கள் ஆகும். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களில் மூவருக்கு தொற்றுக் கண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 33,339 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

503 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது. சிலாங்கூரில் 129 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 900 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர். நேற்று, சுமார் 972 பேர் குணமைடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன.

இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 23,120– ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.

மொத்தம் 9,968 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 91 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 32 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மொத்த மரணங்களின் எண்ணிக்கை 251- ஆக உயர்ந்துள்ளது.