Home One Line P1 கொவிட்19: 8 பேர் மரணம்- 972 சம்பவங்கள் பதிவு!

கொவிட்19: 8 பேர் மரணம்- 972 சம்பவங்கள் பதிவு!

570
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை 972 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 967 ஆகும். வெளிநாட்டு தொற்றுகள் 5 ஆக அடையாளம் காணப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 41,181 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சபாவில் 370 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதுவரையிலும் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவே குறைவானதாகக் கருதப்படுகிறது. மேலும், கோலாலம்பூரில் 22 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 137, நெகிரி செம்பிலானில் 260, மற்றும் புத்ராஜெயாவில் 5 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சபாவைக் காட்டிலும் சிலாங்கூர், கோலாலம்பூர், நெகிரி செம்பிலானில் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகமாக 1,345 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 29, 579- ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,308 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 86 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று 8 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 294-ஆக உயர்ந்துள்ளது.