Home One Line P1 கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கிள்ளான் பள்ளத்தாக்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

533
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சிலாங்கூர் ஆற்று நீர்  மாசுபாடு இன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களான கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் ஆகியவற்றை மூடுவதாக ஆயர் சிலாங்கூர் அறிவித்தது.

இதன் விளைவாக, திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி 1,279 பகுதிகளை உள்ளடக்கிய 1,139,008 கணக்குகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதில் கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலா லங்காட் ஆகியவையும் அடங்கும்.

“சிலாங்கூர் ஆற்றில் காணப்படும் கரைப்பான்கள் மற்றும் அசுத்தங்களை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகள் சுங்கை சிலாங்கூர்  அணையில் இருந்து ஒரு நாளைக்கு 300 மில்லியன் லிட்டர், 500 மில்லியன் லிட்டர் சுங்கை திங்கி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதன் மூலம் செய்யப்பட்டுள்ளன,” என்று அது கூறியது.