Home One Line P1 ஈப்போவில் ஊழியர் இறந்ததை அமைச்சு விசாரிக்கிறது!- எம்.சரவணன்

ஈப்போவில் ஊழியர் இறந்ததை அமைச்சு விசாரிக்கிறது!- எம்.சரவணன்

456
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வாரம் ஈப்போவில் வியத்தகு முறையில் ஓர் ஊழியர் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இனவெறி குற்றச்சாட்டுகளை மனித வளத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் உத்தரவாதம் தருகிறேன்,” என்று மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நவம்பர் 6-ஆம் தேதி 52 வயதான மேலாளர் காரை தனது அலுவலகத்தில் மோதி சேதத்தை ஏற்படுத்தினார். அவர் பெட்ரோல் குண்டுகளையும் வீசியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பின்னர் அந்த நபர் தப்பி ஓடி லாரியுடன் மோதியதில் இறந்தார்.

பொதுமக்களின் சாட்சியின்படி, ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் லாரி மோதுவதற்காகவே வேண்டுமென்றே சாலையைக் கடந்ததாகக் கூறப்படுகிறது.

இது நடப்பதற்கு முன்பதாக, அவர் வேலை அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும், இன பாகுபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி 14 நிமிட காணோலியை யூடியூப்பில் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.

அவர் நிறுவனத்திற்கு எதிராக செய்த காவல் துறை புகார் அறிக்கைகளின் இரண்டு நகல்களையும் காட்டியுள்ளார்.