இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 46,209 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்னமும், 12,131 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 43 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 306-ஆக உயர்ந்துள்ளது.
மிக அதிகமான தொற்றுகளை 391 சம்பவங்களோடு சபா பதிவு செய்துள்ளது. நெகிரி செம்பிலான் 371 சம்பவங்களைப் பதிவு செய்தது. சிலாங்கூர் மாநிலமும் 200 சம்பவங்களைப் பதிவு செய்தது.