Home One Line P1 மேலும் 4 குடிநுழைவு கும்பல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது

மேலும் 4 குடிநுழைவு கும்பல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது

426
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனா, வியட்நாம், இந்தோனிசியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட குடிநுழைவுத் துறை தொடர்பான மேலும் 4 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நான்கு நபர்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கொண்டு வரும் மூன்று முகவர்களும், ஒரு குடிநுழைவுத் துறை அதிகாரிவயும் ஆவார். இவர்கள் , 28 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள்.

“ஓப்ஸ் செலாட்” என்று அழைக்கப்படும், எம்ஏசிசி மற்றும் குடிநுழைவுத் துறையின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மொத்தம் 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது இன்னும் வீடுகள், நிலங்கள், நகைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பிற பொருட்களை சேர்க்கவில்லை என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு என்னவென்றால், கேபி19-தர குடிநுழைவுத் துறை அதிகாரி நான்கு சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளது. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், முஸ்டாங், ரேஞ்ச் ரோவர் மற்றும் ஒரு ஆடி காரும் அடங்கும்.

“மலேசியாவில் இயங்கும் சீன குடியேறிய தொழிலாளர் முகவர்கள் என நம்பப்படும் இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு உள்ளூர் முகவர்கள் உட்பட நான்கு வெளிநாட்டு தொழிலாளர் முகவர்களின் கீழ் இந்த கார்கள் பதிவு செய்யப்பட்டன. நாங்கள் நான்கு பேரையும் அடையாளம் கண்டுள்ளோம், அவற்றைக் கண்காணித்து வருகிறோம், ” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடியேற்ற குற்றங்களுக்காக தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான முகப்புகளை அமைப்பதற்கான வெகுமதிகளாக இந்த சொகுசு வாகனங்கள் என நம்பப்படுகின்றது.

“மலேசியாவில் நுழைய விரும்பும் தடுப்புப்பட்டியலில் உள்ள நபர்களின் பெயர்கள், கடப்பிதழ் எண்கள் மற்றும் விமான அட்டவணைகள் குறித்து மலேசியாவில் உள்ள முகவர்களுக்கு அறிவிக்கப்படும்.

“இந்த முகவர்கள் பின்னர் கேஎல்ஐஏ மற்றும் கேஎல்ஐஏ2- இல் உள்ள குடிநுழைவுத் துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்ட பிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மலேசியாவிற்கு எளிதாக அணுக அனுமதிக்கும்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ​​நடவடிக்கையில், அதிகமானோர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பை எம்ஏசிசி விசாரணை இயக்குநர் நோராஸ்லான் மொஹமட் ரசாலி நிராகரிக்கவில்லை.

எம்ஏசிசி சட்டம் 2009-இன் பிரிவு 16 மற்றும் பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத செயல்கள் சட்டம் 2001- இன் பிரிவு 16 ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.