Home One Line P1 கொவிட்19: என்றும் இல்லாத அளவிற்கு 1,884 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: என்றும் இல்லாத அளவிற்கு 1,884 சம்பவங்கள் பதிவு

396
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வரையிலான, கடந்த 24 மணி நேரத்தில் 1,884 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் மட்டும் 1,882 ஆகும். வெளிநாட்டிலிருந்து 2 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கிறன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 56,659 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சிலாங்கூரில் என்றும் இல்லாத அளவிற்கு 1,203 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 289 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 196 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 883 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 42,480-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 13,842 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 115 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 48 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 335-ஆக உயர்ந்துள்ளது.