Home One Line P1 கொவிட்19: தொற்று சம்பவங்கள் 2,000-ஐ தாண்டியது!

கொவிட்19: தொற்று சம்பவங்கள் 2,000-ஐ தாண்டியது!

580
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,188 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகமான தொற்று சம்பவங்கள பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் மட்டும் 1,623 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்றைய தொற்று சம்பவங்கள அனைத்துமே உள்ளூரில் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 58,847 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சபாவில் 232 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பேராக்கில் 112 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் 90 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று 1,673 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 44,153-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 14,353 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 112 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 49 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று நால்வர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 341-ஆக உயர்ந்துள்ளது.