Home One Line P1 ‘செப்டம்பர் நிலவரப்படி 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர்!’- எம்.சரவணன்

‘செப்டம்பர் நிலவரப்படி 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர்!’- எம்.சரவணன்

388
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைமை (இஐஎஸ்) பதிவுகளின்படி, 2020 ஜனவரி முதல் நவம்பர் 13 வரை மொத்தம் 95,995 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் நிலவரப்படி அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக உள்ளது, அதாவது 737,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் முன்பு தொழிற்சாலைகள் மற்றும் தங்கும்விடுதிகள், உணவு மற்றும் பானம், கிடங்கு, சில்லறை துறைகளில் பணியாற்றியவர்கள். தொழில்முறை, தொழில்நுட்ப, நிர்வாக சேவைகள் மற்றும் கட்டுமானத் துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜெராந்துட் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்லான் இட்ரிஸின் தனி கேள்விக்கு பதிலளித்த சரவணன், 2020 செப்டம்பருக்கான வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாக உள்ளது, இது 737,500 பேர் வேலையில்லாமல் இருப்பதற்கு சமம் என்று தெரிவித்தார்.

இது முந்தைய மாதத்திலிருந்து 0.1 விழுக்காடு முன்னேற்றம் கண்டுள்ளது (741,600 பேர் வேலையில்லாமல்) என்று அவர் குறிப்பிட்டார்.

பெரும்பாலான வேலையற்ற நபர்கள் இஐஎஸின் உதவியை நாடவில்லை.

2020 முதல் காலாண்டில் இருந்து 3.5 விழுக்காடாக இருந்த வேலையின்மை மோசமடைந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

ஜூலை முதல் வேலை இழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் குறைந்து வருகிறது என்று அமைச்சர் கூறினார்.

ஜூன் மாதத்தில் 18,579 பேர், ஜூலை மாதம் 16,660 மற்றும் அக்டோபரில் 7,310 பேர் வேலை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான வேலை இழப்பு புள்ளிவிவரங்களை அமைச்சர் வழங்கவில்லை.