Home One Line P1 கொவிட்19: 1,141 புதிய சம்பவங்கள் பதிவு!

கொவிட்19: 1,141 புதிய சம்பவங்கள் பதிவு!

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,141 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,138 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 3 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 70,236 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,144 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 59,061-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 10,799 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 129 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 53 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக சிலாங்கூரிலும், சபாவிலும் மிக அதிகமான 320 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதற்கடுத்து கோலாலம்பூரில் 250 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று எந்த மரணமும் பதிவு செய்யப்படவில்லை. மரண எண்ணிக்கை 376-ஆக உள்ளது.