Home One Line P1 சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பைசால் அசுமு அரண்மனை வந்தடைந்தார்

சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பைசால் அசுமு அரண்மனை வந்தடைந்தார்

426
0
SHARE
Ad

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இங்குள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5.15 மணிக்கு அரண்மனைக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து, மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெரிவிக்க அகமட் பைசல் சுல்தானை சந்திக்க உள்ளார் என்று அறியப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்று காலை மாநில சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையின் தீர்மானத்தில் அகமட் பைசால் தோல்வியுற்றார். அவருக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆதரவாக மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் வாக்களித்தனர்.