Home One Line P1 பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ

பேராக்: பெர்சாத்து, பாஸ் கூட்டணி மாநிலத்தில் தொடர வேண்டும்- அம்னோ

431
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தேசிய தலைமை பேராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கம் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

“தற்போதைய அரசாங்க ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதே பதவிகளில் அமர்த்தப்பட வேண்டும். பெராக்கில் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு பெர்சாத்து மற்றும் பாஸ் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அம்னோவிலும் உள்ளது,” என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கூறினார்.

இன்று பேராக் சட்டமன்றத்தில் அகமட் பைசால் அசுமு பெரும்பான்மையைப் பெறத் தவரியதை அடுத்து புதிய மந்திரி பெசாருக்கான தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

“இது மாநில அரசின் நிலையை மாற்றாது,” என்று அகமட் கூறினார். முன்னதாக, பாஸ் கட்சி புதிய பேராக் அரசாங்கத்தில் பங்கேற்காது என்று கூறியிருந்தது.

பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை, இன்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது மத்திய தலைமையின் முடிவு என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்திருந்தார்.

“பாஸ் மத்திய குழுவின் நிலைப்பாட்டின் முடிவுக்கு ஏற்ப மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசாருக்கு ஆதரவளித்தனர். அந்த முடிவுக்கு ஏற்ப, புதிய பேராக் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணைய வேண்டாம் என்று மத்திய பாஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இருப்பினும், சமூகத்திலும், மாநிலத்திலும், தேசிய மட்டத்திலும் வழக்கம் போல் பாஸ் தனது பங்கைத் தொடரும்,” என்று தக்கியுடின் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாஸ் பெர்சாத்து தலைமையிலான தேசிய கூட்டணியில் உறுப்பினராக உள்ளது. இருப்பினும், இது முவாபாகாட் நேஷனலில் அம்னோவுடன் தொடர்பில் உள்ளது.