Home One Line P1 கொவிட்19: 1,600 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

கொவிட்19: 1,600 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்

394
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,600 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,597 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 3 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 74,294 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,033 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 62,306-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,604 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 129 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 57 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக நெகிர் செம்பிலானில் இன்று மிக அதிகமான 541 சம்பவங்கள் பதிவாந்து. சிலாங்கூரில் 426 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 248 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதற்கடுத்து கோலாலம்பூரில் 148 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது.