இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 7 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ஆஜித், ஆரி அர்ஜூனன், அனிதா சம்பத், நிஷா, ரம்யா பாண்டியன், சனம், ஷிவானி ஆகியோரே அந்த எழுவராவார்.
நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 5) ஒளியேறிய நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆரியும், ரம்யா பாண்டியனும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
எஞ்சிய ஐவரில் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியின் மூலம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படவிருந்த நிலையில் சனம் பெரும்பான்மை இரசிகர்களின் வாக்களிப்பின்படி வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரத்தில், பிக்பாஸ் இல்லத்திலிருந்து மாடலிங் துறையில் புகழ்பெற்ற பங்கேற்பாளரான சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.