Home One Line P2 சின்ன திரை சித்ராவின் கணவர் கைது!

சின்ன திரை சித்ராவின் கணவர் கைது!

707
0
SHARE
Ad

சென்னை: தற்கொலைக்கு தூண்டியதாக, சின்ன திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்தை நசரத்பேட்டை காவல் துறையினர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்தனர்.

ஆறு நாட்கள் விசாரணைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு முறையான தடுப்புக் காவல் அனுமதிக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக காவல் துறையினருக்கு நம்பிக்கை ஏற்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சித்ராவுக்கும், தொழிலதிபரான ஹேமந்துக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் இந்து முறையிலான திருமணத்தை அவர்கள் திட்டமிட்டிருந்தனர். கடந்த புதன்கிழமை காலை ஒரு தங்கும் விடுதி அறையில் அவர் இறந்து கிடந்தார்.

#TamilSchoolmychoice

அவரது பெற்றோரும் நண்பர்களும் சித்ராவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி முழுமையான விசாரணைக்கு கோரினர்.

தற்கொலை செய்து கொண்ட நாளில், ஹேமந்த் தங்கும் விடுதிக்கு அருகில் அமைந்துள்ள படப்பிடிப்பு இடத்திற்குச் சென்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஹேமந்த் சந்தேகப்பட்டு அந்த பிரச்சனையால் இருவரும் சண்டையிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தங்கும் விடுதி அறைக்கு வெளியே இருக்கும்படி அவரிடம் கேட்டு, சித்ரா உள்ளே சென்று வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.