Home One Line P1 கொவிட்-19: 2,062 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

கொவிட்-19: 2,062 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

651
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை வரையில், 24 மணி நேரத்தில் 2,062 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. நேற்றும் 2,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூரில் 2,058 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 4 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 97,389 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 911 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 79,304-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 17,646 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 111 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 51 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 439-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 1,014 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 504 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.சபா 252 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் 167 தொற்றுகள் பதிவாகி உள்ளன.