Home One Line P2 பிக்பாஸ் 4 : ஆரி அர்ஜூனன் காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : ஆரி அர்ஜூனன் காப்பாற்றப்பட்டார்

1860
0
SHARE
Ad

சென்னை :ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடர்   நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து ஐந்து பங்கேற்பாளர்கள் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

ஆஜித், ஷிவானி, அனிதா சம்பத், ஆரி அர்ஜூனன், கேப்ரியல்லா ஆகியோரே அந்த ஐவராவர்.

அவர்களில் ஆரி அர்ஜூனன் காப்பாற்றப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியின் நடத்துநரான கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எஞ்சிய நால்வரில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கமல் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.