Home One Line P1 அறிகுறிகளற்ற கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் நிலைமை மோசமாகிற அறிகுறியாகும்!

அறிகுறிகளற்ற கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் நிலைமை மோசமாகிற அறிகுறியாகும்!

334
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அறிகுறிகள் இல்லாத கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை மலேசியா மிக மோசமான நிலையில் இருக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.

மலாய் மெயில் செய்தித்தளத்தில் புதிய விதிகள் குறித்து சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசினார். புதிய தொற்றுநோய்களால் சுகாதார வசதிகள் இப்போது நிரம்பி வழிகின்றன என்று அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, அனைத்து நேர்மறையான நிகழ்வுகளும், அவை அறிகுறிகளைக் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படும்.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபரில் சபாவிலும் இதே நெறிமுறை பயன்படுத்தப்பட்டது என்று சுல்கிப்ளி கூறினார்.

“அவர் (ஹிஷாம்) இதை கூறுகிறார் என்றால், நிலைமை கட்டுப்பாட்டைத் தாண்டிவிட்டது என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும். இது ஒரு புதிய விஷயம் அல்ல, சபாவில் இதுதான் நடக்கிறது,” என்று கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

தற்போதுள்ள படுக்கைகள் நோயாளிகளின் எண்ணிக்கையை தங்க வைக்க முடியாதபோது, சபாவில் உள்ள மருத்துவமனைகள் முன்பு நெரிசலில் இருந்தன. அதே நேரத்தில் முன்னணி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்டனர்.

அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், குறைவான பாதிப்புக்குள்ள கொவிட் -19 நோயாளிகளை வீட்டிலேயே வைப்பதற்கான பரிந்துரையை தவிர்க்க முடியாது என்று சுல்கிப்ளி கூறினார்.

டிசம்பர் 9 முதல் ஒவ்வொரு நாளும் மலேசியாவில் 1,000- க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

போதுமான அளவு படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சில நாட்கள் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்று நூர் ஹிஷாம் முன்னதாக கூறியிருந்தார்.

“இது சபாவிலும் நடந்தது. நாங்கள் ஒரு நாளைக்கு 1,000- க்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பற்றி பேசுகிறோம். வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே அதிகரித்த பரிசோதனைகள் காரணமாகவும், மேலும், அதிகமான சம்பவங்கள் கண்டறியப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை தனிமைப்படுத்த இடமில்லை. நம்மிடம் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். நாங்கள் படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்துகிறோம், ” என்று அவர் கூறியுள்ளார்.